• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொதுக் கல்வியினை நவீனமயப்படுத்தும் கருத்திட்டத்திற்குத் (General Education Modernization - GEM) தேவையான நிதியினைப் பெற்றுக்கொள்ளல்
- இலங்கை கல்வித்துறையில் கணிசமான முன்னேற்றம் அண்மைய தசாப்த காலப்பகுதியில் காணக்கிடைத்தாலும், பிரதான விடயங்களின் பெறுபேறுகளிலான முன்னேற்றம் நாட்டின் பல்வேறுபட்ட மாகாணங் களுக்கிடையில் முரண்பாட்டினை காட்டுகின்றது. அதேபோன்று பாடசாலை பிள்ளைகளை சிறந்த பிரசைகளாக ஆக்கும் மற்றும் தற்போதைய உலக பொருளாதாரத்தினுள் பயனுள்ளவர்களாக மாற்றும் வகையில் பிரச்சினைகளைத் தீர்த்தல், குறியிலக்குகளை நோக்கி செல்வதற்கான எண்ணம், ஒழுங்குறுத்தல், நம்பிக்கை, குழு செயற்பாடுகள் மற்றும் ஒழுக்கநெறி விருத்தி போன்ற சமூகம் சார்ந்த தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ளும் விதத்திலான பொதுக்கல்வி முறைமையை விருத்தி செய்வதன்பால் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'அறிவினை மையமாகக் கொண்ட கல்வி முறைக்கு மாறும் கருத்திட்டத்தின்' அனுபவத்தின் அடிப்படையிலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கல்வி முறைமைகளுக்கு ஒருங்கிணைவாக பொதுக் கல்வி துறையினை மேலும் பலப்படுத்துவதற்கு 'பாடசாலை கல்வியினை மாற்றும் கருத்திட்டம்' என்னும் பெயரில் புதிய கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்திக்கான சமவாயத்திடமிருந்து 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்காக கடன் இணக்கப் பேச்சுக்களை நடாத்துவதற்கும் உரிய கடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.