2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிராமிய பாலங்களை நிருமாணித்தல் - போக்குவரத்து இணைப்புகளை கட்டியெழுப்புவதன் மூலம் தூர பிரதேசங்களிலுள்ள பல பின்னடைந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சந்தை, கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கில் 4,000 பாலங்களை நிருமாணிப்பதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நேரடி கடன் வழங்கும் வசதியானது இந்தக் கருத்திட்டத்திற்கு நிதி பெற்றுக் கொள்வதற்கு சாதகமான கடன் மூலவளமொன்றென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக 50 மில்லியன் ஐக்கிய இராச்சிய பவுண்கள் கொண்ட செலவின் கீழ் கிராமிய பாலங்கள் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய இராச்சியத்திலுள்ள நிருமாணிப்பு நிறுவனங்களிடமிருந்து பிரேரிப்புகளை அழைப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிகாரத்தைக் கையளிப்பதற்கும் அதன்போது முன்வைக்கப்படும் பிரேரிப்புகள் மற்றும் விலைகளை மதிப்பிட்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக உரிய தொழினுட்ப மதிப்பீட்டு குழுவுக்கும் கொள்வனவு குழுவுக்கும் அதிகாரத்தைக் கையளிப்பதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |