• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்க குடியரசின் சமாதான குழும நிகழ்ச்சித்திட்டத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளல்
- ஐக்கிய அமெரிக்க குடியரசின் சமாதான குழும நிகழ்ச்சித்திட்டமானது 1962 ஆம் ஆண்டிலிருந்து காலத்துக்குக் காலம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, முக்கியமாக 2004 சுனாமி அனர்த்தத்தின் போது நிவாரண சேவைகள் மற்றும் மீள் கட்டியெழுப்பல் முயற்சிகளுக்கு கணிசமான உதவி இதன் மூலம் வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் இந்த நிகழ்ச்சித்திட்டமானது இலங்கையில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆங்கில மொழி கற்பித்தலுக்காக இந்த சமாதான குழு நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கையில் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தினால் செய்யப்படும் கோரிக்கையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் நாட்டில் தாபிப்பதற்கு ஐக்கிய அமெரிக்க குடியரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆங்கில மொழி ஆசிரியர்களின் ஆற்றலை விருத்தி செய்வதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் உதவி கிடைக்கப் பெறுவதோடு, இதன் தொண்டர்கள் நாட்டிலுள்ள இரண்டாம் நிலை பாடசாலைகளில், பிராந்திய ஆங்கில மொழி உதவி நிலையங்களில் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைவாக, இந்த சமாதானக்குழு நிகழ்ச்சித்திட்டத்தை நாட்டினுள் மீண்டும் நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ஐக்கிய அமெரிக்க குடியரசு அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.