2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாகோவிலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி செய்தல் - இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் மாகோ விலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரத பாதை பகுதியை புனரமைப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்திற்கான பொறியியல், கொள்வனவு மற்றும் நிருமாணிப்பு ஒப்பந்தக்காரர்களை இனங்காண்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்திய EXIM வங்கியின் அவதானிப்புரைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட முற்தகைமைகளைக் கொண்டுள்ள மூன்று நிறுவனங்களுக்கு கேள்வி ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, மாகோ - அநுராதபுரம் பகுதி மற்றும் அநுராதபுரம் - வவுனியா பகுதி என்னும் விதத்தில் இரண்டு பகுதிகளாக இந்த புகையிரப் பாதையின் அபிவிருத்தி பணிகளை துரிதமாக பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதென போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |