• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழினுட்பவியலாளர்கள் சார்பில் தேசிய திரைப்பட கூட்டுத்தாபன நம்பிக்கை பொறுப்பின் ஊடாக வழங்கப்படும் ஓய்வூதியக் கொடுப்பனவை அதிகரித்தல்
- 60 வயதினைப் பூர்த்தி செய்த திரைப்படக் கலைஞர்களுக்கும் தொழினுட்பவியலாளர்களுக்கும் மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவொன்று வழங்கும் வேலைத்திட்டமொன்று 1986 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள 'தேசிய திரைப்பட கூட்டுத்தாபன நம்பிக்கை பொறுப்பு' மூலம் 1987 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் மாதமொன்றுக்கு 2,000 ரூபா வீதமான கொடுப்பனவொன்று இளைப்பாறியுள்ள திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழினுட்பவியலாளர்கள் 57 பேர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வருகின்றதோடு, மேலும் 106 விண்ணப்பதாரர்கள் இந்தக் கொடுப்பனவினை எதிர்பார்த்துள்ளனர்.

இதற்கமைவாக, தற்போதைய நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவினை 5,000 ரூபா வரை அதிகரிப்பதற்கும் இளைப்பாறிய திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழினுட்பவியலாளர்கள் 163 பேர்களுக்கு இந்த கொடுப்னவினை செலுத்துவதற்கு இயலுமாகும் வகையில் திரைப்படக் கூட்டுத்தாபன நம்பிக்கை பொறுப்புக்கு 10 மில்லியன் ரூபாவைக் கொண்ட திறைசேரி கொடையொன்றை பெற்றுக் கொள்வதற்குமாக பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.