• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாணந்துறை பிரதேச செயலகத்தை விரிவுபடுத்துவதற்காக இலங்கை மின்சார சபையிடமிருந்து உடைமையாக்கிக் கொள்ளப்படும் காணித் துண்டுக்குப் பதிலாக மாற்று காணித் துண்டொன்றை வழங்குதல்
- பாணந்துறை பிரதேச செயலகத்தின் இடவசதி போதுமானதாக இல்லாமையினால் அதன் இடவசதிகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கு இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான அதற்கு அண்மையில் அமைந்துள்ள 80 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணியை குறித்தொதுக்கிக் கொள்வதற்கும் அதற்காக பாணந்துறை நகர எல்லையினுள் மாற்றுக் காணித் துண்டொன்றை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இந்த சபைக்கு மாற்றுக் காணியொன்றாக வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான மோதரவில கைத்தொழில் பேட்டையில் அமைந்துள்ள 120 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை குறித்தொதுக்குவதற்கும் இதன் சார்பில் பாணந்துறை பட்டிய வடக்கு பிரதேசத்திலுள்ள 124 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை இறையிலிக் கொடையொன்றாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிப்பதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.