• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக்குறைந்த வயதெல்லையை அதிகரிப்பதற்கு உரியதாக 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தை திருத்துதல்
- இலங்கையிலுள்ள சட்டங்களுக்கு அமைவாக 08 வயதிற்கு குறைந்த சிறார்களுக்கு குற்றங்கள் பொறுப்பாக்கப்படுவதில்லை. ஆயினும் இது மிகக் குறைந்த வயதெல்லை என உளவியல் மருத்துவர்களினதும் உரிய துறைசார்ந்த நிபுணர்களினதும் கருத்தாகும். இந்த வயதெல்லையை 12 வயதாக அதிகரிப்பதற்கும் 12 வயதிற்கு மேற்பட்டு இருப்பினும் 14 வயதிற்கு குறைந்த ஒருவர் சம்பந்தமானவிடத்து குற்றம் சுமத்தப்பட்ட குற்றத்தினை புரிகையில் அதன் கடும் தன்மையை விளங்கிக் கொள்வதற்கான அறிவு குறித்த சிறுவருக்கு இருந்ததா என்பது பற்றி தீர்மானிக்கும் தற்றுணிவு நீதவானுக்கு வழங்கக் கூடிய விதத்தில் தண்டனைச் சட்டக்கோவையை திருத்தும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் விஞ்ஞான ரீதியில் உரிய கருத்தினை எடுப்பதற்கு நிபுணத்துவ உதவியினைப் பெற்றுக் கொள்வதற்கு நீதவானுக்கு இயலுமாகும் வகையில் குறித்த சிறுவனை அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் ஒருவரைக் கொண்டு பரீட்சிப்பதற்கான உரிய ஏற்பாடுகளை செய்து 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தை திருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.