• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் 'ஜேர்மன் கைத்தொழில், வர்த்தக பிரதிநிதிகள் குழு' அலுவலகமொன்றைத் தாபித்தல்
- உலகளாவிய பொருளாதாரத்துடன் இணைந்து உச்ச பொருளாதார நலன்களை பெற்றுக் கொள்வது அரசாங்கத்தின் கொள்கையாவதோடு, பலம்மிக்க பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுடன் பயனுள்ள விதத்தில் பங்களிப்பினை ஏற்படுத்திக் கொள்வது இதன் பிரதான திறமுறையொன்றாகும். இதற்கமைவாக ஜேர்மன் மற்றும் இலங்கை வர்த்தக சங்கங்கள், அமைப்புகள் மற்றும் வர்த்தக துறை சார்ந்தவர்களுடனான உறவுகளையும் பங்களிப்பினையும் மேம்படுத்தும் நோக்கில் ஜேர்மன் கைத்தொழில், வர்த்தக பிரதிநிதிகள் குழு அலுவலகமொன்றை கொழும்பில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அலுவலகமொன்றை இலங்கையில் தாபிப்பதன் மூலம் முக்கியமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைதொழில்களை தழுவும் விதத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாய் அமைவதோடு, இரு நாடுகளினதும் முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் புதிய வாய்ப்புகளும் உருவாகும். ஆதலால், ஜேர்மன் கைத்தொழில், வர்த்தக பிரதிநிதிகள் குழு அலுவலகமொன்றை கொழும்பில் தாபிப்பதற்கான வசதிகளை வழங்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு திலக் மாரப்பன அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.