2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாரிய இரத்தினபுரி நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி பெற்றுக் கொள்ளல் - பாரிய இரத்தினபுரி நீர்வழங்கல் கருத்திட்டத்தின் கீழ் 29 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளை தழுவி சுமார் 3,500 குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தின் விநியோக முறைமைக்கு தேவையான ஏனைய உதிரிப்பாகங்கள், பொருத்தும் உதிரிப்பாகங்கள், வால்வுகள், குழாய்கள் வழங்குதல் மற்றும் பதித்தல் என்பவற்றுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த செலவினை தழுவுவதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு 1,528.9 மில்லியன் ரூபாவை கொண்ட கடன் தொகையொன்றை வழங்குவதற்கு இலங்கை வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இந்த கடன் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை வங்கியுடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கு அதிகாரத்தை கையளிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |