2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஹசலக்க நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி பெற்றுக்கொள்ளல் - ஹசலக்க பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஹசலக்க நீர் வழங்கல் கருத்திட்டத்தின் மூலம் 33 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 49,370 பொதுமக்களுக்கு ஆரோக்கியமான குடிநீர் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் ஏற்கனவே ஒப்பந்தம் கையளிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கான செலவினை தழுவுவதற்கு தேவையான நிதியினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு 6,235 மில்லியன் ரூபாவை கொண்ட கடன் தொகையொன்றை வழங்குவதற்கு மக்கள் வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இந்த கடன் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வங்கியுடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கு அதிகாரத்தை கையளிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |