• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பாதுகாப்பு நிதிய சட்டத்தை திருத்துதல்
- மரணித்த, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களினது குடும்பங்களின் நலனோம்பல் சார்பில் தாபிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு நிதியத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி இந்த நிதியத்தின் நிருவாக பணிகளை ஒழுங்குமுறைபடுத்தும் பொருட்டு இந்த நிதியம் தாபிக்கப்பட்டுள்ள 1985 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தேசிய பாதுகாப்பு நிதிய சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.