• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குதல்
- அண்மையில் நாட்டில் தாக்கத்தை செலுத்திய வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்ட வரட்சியினால் 291,945 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவசாய குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களுக்கு மேலதிகமாக தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குவதற்கு பிரேரிப்புகளை சமர்ப்பிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வரட்சி நிலைமை காரணமாக தொடர்ச்சியாக 2016/2017 பெரும்போகம், 2017 சிறுபோகம், 2017/2018 பெரும்போகம் ஆகிய மூன்று (03) போகங்களிலும் பயிர்செய்யாத விவசாய குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் உலர் உணவு பொதியை 2018 சனவரி மாதத்திலிருந்து 2018 ஏப்ரல் வரையில் மேலும் வழங்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினாலும் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினாலும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.