• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பங்கு பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கலுக்கான (Demutualisation) சட்டத்தை அறிமுகப்படுத்துதல்
- இலாபத்தை நோக்காக கொள்ளாத உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக 1985 ஆம் ஆண்டில் கொழும்பு பங்கு பரிவர்த்தனையானது தாபிக்கப் பட்டுள்ளதோடு, இது கூட்டு பங்கு பரிவர்த்தனையாக செயற்படும் தெற்காசியாவின் ஒரே பிரதான பங்கு பரிவர்த்தனையாகும். உறுப்பினர்களினால் கட்டுப்படுத்தப்படும் இலாபத்தை நோக்காகக் கொள்ளாத பங்குதாரர்களினால் உரிமை வகிக்கப்படும் நிறுவனங்கள் இலாப நோக்கத்தைக் கொண்ட கம்பனிகளாக மாற்றப்படும் செயற்பாடானது 'பரஸ்பரமற்றமயமாக்கல்' (Demutualisation) என அழைக்கப்படும்.

சிறந்த நிருவாகத்தை உறுதிப்படுத்துவதற்கும் பல்வகைப்பட்ட பங்குரிமையை மேம்படுத்துவதற்குமாக பரஸ்பரமற்றமயமாக்கல் கொண்ட பங்கு பரிவர்த்தனையாக கொழும்பு பங்கு பரிவர்த்தனையை தாபிக்கும் தேவையுள்ளது. இதற்கமைவாக கொழும்பு பங்கு பரிவர்த்தனையை பங்குகளினால் வரையறுக்கப்பட்ட பரஸ்பரமற்றமயமாக்கல் கொண்ட பங்கு பரிவர்த்தனை யொன்றாக மாற்றுவதற்கும் அதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை செய்வதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, தயாரிக்கப்பட்டுள்ள கொழும்பு பங்கு பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கலுக்கான (Demutualisation) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.