• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறன்கள் துறை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலதிக கடன் உதவி பெற்றுக் கொள்ளல்
- தொழிற்சந்தையின் கேள்வியினை ஈடுசெய்வதற்காக வினைத்திறன் மிக்க திறன்கள் அபிவிருத்தி வழிமுறையொன்றை நிருமாணிக்கும் நோக்கில் 2014 - 2020 காலப்பகுதியில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 'திறன்கள் அபிவிருத்தி துறை நிகழ்ச்சித்திட்டம்' என்பதற்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு 'திறன்கள் துறை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை' ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி பயிற்சித்துறையின் தரத்தினை மேம்படுத்தல், இந்த துறைக்கு கைத்தொழிற்றுறையின் பங்களிப்பினை அதிகரித்தல், கொள்கை, நிறுவன மற்றும் தொழிற்பாட்டு மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துதல் போன்ற நோக்கங்களை இதன் மூலம் அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்க்ள கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இணக்கப் பேச்சுக்களை நடாத்துவதற்கும் உரிய கடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.