• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான இலஞ்ச சட்டத்தைத் திருத்துதல்
- இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்காக நிலவும் சட்டங்களை தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்தும் தேவையை இனங்கண்டு இலஞ்சம் அல்லது ஊழல் முறைபாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழு சட்டத்தையும் அதனுடன் இடைநேர்விளைவான சட்டங்களையும் திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று நிதி குற்றங்கள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்புபட்ட வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு மூவரடங்கிய மேல் நீதிமன்றமொன்றைத் தாபிப்பதற்கு நீதித்துறை நிருவாக சட்டமும் திருத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு ஒருங்கிணைவாக இலஞ்ச முறைப்பாடுகள் தவிர ஊழல் முறைப்பாடுகள் சம்பந்தமான வழக்குகளும் நீதவான் நீதிமன்றங்களுக்கு மாத்திரமன்றி மேல் நீதிமன்றங்களிலும் விசாரிக்கக் கூடிய விதத்தில் ஏற்பாடுகளை உள்ளடக்கி 1954 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 70 ஆம் பிரிவு திருத்தப்பட வேண்டியுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.