2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உத்தியோகர்களுக்காக கலபளுவாவவில் உத்தியோகபூர்வ வீட்டுக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல் - விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கொன்சரபில் / பொலிஸ் சார்ஜன் / உதவிப் பொலிஸ் பரிசோதகர் / பொலிஸ் பரிசோதகர் ஆகிய தரங்களைச் சேர்ந்த திருமணமான உத்தியோகர்களுக்கு கலபளுவாவவில் உத்தியோகபூர்வ வீட்டுக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 289.59 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Construction Managers and Planners (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |