• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குருநாகல் போதனா வைத்தியசாலையில் பக்கவாத பிரிவொன்றை நிருமாணிப்பதற்கான கேள்வி
- பக்கவாதம் முதியோர்களின் இயலாமைக்கு பிரதான காரணமாக அமைவதோடு, இது இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் நிகழும் மரணங்களுக்கான நான்காவது பிரதான காரணமாக மாறியுள்ளது. ராகம புனர்வாழ்வளிப்பு வைத்தியசாலை தவிர நாட்டில் ஏனைய எந்தவொரு வைத்தியசாலையிலும் சரியான வசதிகளுடன் கூடிய பக்கவாத சிகிச்சை பிரிவொன்று கிடையாது. குருணாகல் போதனா வைத்தியசாலையில் பக்கவாத பிரிவொன்றை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பக்கவாத பிரிவை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 230.57 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Link Enginneing (Pvt.) Ltd நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.