• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடற்றொழில் துறையின் முன்னேற்றத்துக்காக புத்திஜீவிகள் சபை கட்டமைப்பொன்றைத் தாபித்தல்
- பொருளாதார அபிவிருத்தியை அடையும் நோக்கில் இலங்கைக்குச் சொந்தமான சமுத்திர வளத்தை நிலைபேறான அடிப்படையில் பயன்படுத்துதல் மற்றும் அதன் முகாமைத்துவம் சம்பந்தமான கொள்கைகளை வகுத்தல் கடற்றொழிலின் சமுத்திர சுற்றுலாத்துறையினதும் நவீனமயப்படுத்தல் நோக்கங்களை வெற்றி கொள்வதற்கு கூட்டாக தீர்மானம் எடுக்கும் முக்கியத்துவம் இனங்காணப் பட்டுள்ளது. இதன்போது நிபுணர்களின் கருத்துக்கள், பிரேரிப்புகள் ஆராய்ச்சி தரவுகள் போன்றவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தீர்மானம் எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் புத்திஜீவிகள் சபை கட்டமைப்பொன்றைத் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, பொருளாதார நிபுணர்கள், சுற்றாடல் நிபுணர்கள் சட்டதரணிகள், கப்பல் பொறியியலாளர்கள், கப்பல் மற்றும் அலை தொழினுட்பவியலாளர், சமூகவியலாளர்கள், கடற்றொழில் மற்றும் சுற்றுலாத் துறைசார்ந்த பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் ஆகியோர்களைக் கொண்ட புத்திஜீவிகள் கட்டமைப் பொன்றை கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சில் தாபிக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.