• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத ஒதுக்கு காணிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல்
- புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான மொத்த புகையிரத ஒதுக்கு காணிகளின் அளவு 14,000 ஏக்கர்களாகும். இதில் சுமார் 10 சதவீதமான காணிகள் பல்வேறுபட்ட தரப்பினர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளதோடு, எஞ்சிய காணியிலிருந்து சுமார் 80 சதவீதம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகின்றது. அத்துமீறி குடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களாவதோடு, சிறுதொகையினர் புகையிரத திணைக்களத்தில் தற்போது சேவையாற்றும் உத்தியோகத்தர்களும் அதேபோன்று இளைப்பாறிய உத்தியோகத்தர்களுமாவர். புகையிரத ஊழியர்களினால் சட்டவிரோதமான விதத்தில் புகையிரத திணைக்களத்தின் காணிகளை பயன்படுத்துவதற்கு இடமளித்தல் பிழையான முன்மாதிரியாகுமென்பதோடு, அரசாங்கத்திற்கு கிடைக்கவேண்டிய குத்தகை வருமானமும் இதன் மூலம் இல்லாமற் போகின்றது.

ஆதலால், இந்த புகையிரத ஊழியர்கள் சம்பந்தமாக சாதாரணமானதும் சலுகை ரீதியிலுமான நடவடிக்கையொன்றை பின்பற்றுவதற்கான சாத்தியம் பற்றி ஆராய்ந்து மூன்று (03) மாத காலத்திற்குள் அமைச்சரவைக்கு அறிக்கையிடுவதற்காக தனது தலைமையில் பின்வரும் அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மாண்புமிகு மங்கள சமரவீர அவர்கள்,
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்.

* மாண்புமிகு கயந்த கருணாதிலக அவர்கள்,
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்.

* மாண்புமிகு ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள்,
பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்.