• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேர்தல் காலப்பகுதிக்குள் அரசாங்க ஆதனங்களை அரசியல் மேம்பாட்டிற்காக பயன்படுத்துவதனை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள்
- தேர்தல் காலப்பகுதிக்குள் அரசாங்கத்திற்கு அல்லது பகிரங்க கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான ஏதேனும் அசையும் அல்லது அசையா ஆதனத்தை அரசியல் கட்சிகளின், குழுக்களின், வேட்பாளர்களின் ஊக்குவிப்புக்கு அல்லது பாதிப்புக்கு காரணமாய் அமையும் விதத்தில் அல்லது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்தும் பணிக்கு தடங்கல் ஏற்படும் விதத்தில் பயன்படுத்துவதை தடைசெய்வதற்காக அரசியலமைப்பின் 104ஆ(4)(அ) ஆம் துணை உறுப்புரையின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட ஏற்பாடுகள் 2017‑12‑04 ஆம் திகதியிடப்பட்டதும் 2048/2 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பிரேரிப்பொன்றின் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.