2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் - இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையில் செய்து கொள்ளப்பவுள்ள உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் உள்ள ஏற்பாடுகள் சம்பந்தமாக இரு நாடுகளினதும் நிபுணர்களினால் கலந்துரையாடப்பட்டு உடன்பாடு காணப்பட்டுள்ளது. பொருட்கள் வர்த்தகம், சேவை வர்த்தகம், சேவை விலக்களிப்பு, முதலீடு, அரசாங்க கொள்வனவு, போட்டி போன்ற துறைகளுக்கரிய ஏற்பாடுகள் உத்தேச வர்த்தக உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரைவு உடன்படிக்கை சம்பந்தமாக ஒருசில அமைச்சர்களினால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புரைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பொருத்தமான திருத்தங்களை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் முதலீடுகளில் மிகுந்த நன்மையான சூழல் கட்டியெழுப்பப்படுவதோடு, இதனால் இலங்கைக்கு சிங்கப்பூரிடமிருந்து கிடைக்கப்பெறும் நேரடி வௌிநாட்டு முதலீடு அதிகரிக்கும். இதற்கமைவாக, இறுதி வரைவு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாட்டினை பெற்றுக் கொள்வதற்கு உட்பட்டு, இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இலங்கை சார்பில் கைச்சாத்திடும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |