• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செயலூக்கமிக்க கடன் முகாமைத்துவ சட்டமூலம்
- இலங்கையின் அரசாங்க கடனை நிலையான மட்டமொன்றில் பேணிச் செல்வது தொடர்பில் தேசிய ரீதியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது உருவாகக் கூடிய எந்தவொரு ஆபத்தினையும் தடுப்பதற்கு பொருத்தமான மறுசீரமைப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுதல் வேண்டும். ஆதலால், செயலூக்கமிக்க அரசாஙக் கடன் முகாமைத்துவத்திற்கு திறமுறை ரீதியில் பொறுப்பு முகாமைத்துவத்தை பயன்படுத்துவதற்கான சட்டத்தை வரைவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைவாக, தயாரிக்கப்பட்டுள்ள செயலூக்கமிக்க கடன் முகாமைத்துவ சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.