• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- நீண்டகால சிறுநீரக நோய், பல் மற்றும் எலும்பு கனிய குறைபாட்டிற்கு காரணமாய் அமையும் பாதுகாப்பற்ற நிலக்கீழ் நீரில் தங்கி வாழும் ரம்பேவ மற்றும் மதவாச்சி பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில் அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டத்தின் 1 ஆம் கட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த கருத்திட்டத்தின் 1 ஆம் கருத்திட்டத்தின் கீழ் நீர் பெற்றுக் கொள்ளும் கட்டமைப்பினை நிருமாணித்தல், நீர் சுத்திகரிப்பு, களஞ்சிய கட்டமைப்புகள் இயந்திர, மின்சார மற்றும் கட்டட வேலைகளை நிருமாணித்தல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையிடமிருந்து கிடைக்கப்பெறும் 6.17 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும் உள்ளூர் நிதியான 2,349 மில்லியன் ரூபாவுக்கும் சமமான மொத்த தொகைக்கு M/s. Access Engineering PLC நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.