• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் இலவச தபால் வசதிகளை அதிகரித்தல்
- கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் இலவச தபால் வசதிகளின் பெறுமதியானது 2007 ஆம் ஆண்டின் பின்னர் திருத்தப்படாததோடு, குறித்த இந்த காலப்பகுதிக்குள் அஞ்சல் கட்டணங்கள் மீளமைக்கப்பட்டுள்ளன. ஆதலால், இதற்கு ஒருங்கிணைவாக இலவச அஞ்சல் வசதிக்கு உரியதான பெறுமதியையும் திருத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் 175,000/- ரூபாவைக் கொண்ட வருடாந்த இலவச தபால் வசதியை 350,000/- ரூபா வரை அதிகரிப்பதற்கும் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் 24,000/- ரூபாவைக் கொண்ட வருடாந்த இலவச தபால் வசதியை 48,000/- ரூபா வரை அதிகரிப்பதற்குமாக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.