2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை புகையிரத திணைக்களத்துக்குரிய அனைத்து காணிகளுக்குமான காணி கணக்கெடுப்பு மற்றும் சமூக பொருளாதார ஆய்வு என்பவற்றை நடைமுறைப்படுத்துதல் - தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள கணிசமான காணிகள் புகையிரத திணைக்களத்திற்கு உரியதாகும். பல்வேறுபட்ட சமூக - பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் காரணமாக புகையிரத காணிகளை அத்துமீறி பிடித்து வைத்திருத்தல், பயன்படுத்துதல் போன்ற காரணங்களினால் புகையிரத காணிகளின் எல்லை தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதோடு, புகையிரத தொழிற்பாட்டினை விருத்தி செய்யும் மற்றும் நவீனமயப்படுத்தும் பணிகளின் போதும் இது தடையாகவுள்ளது. அதேபோன்று வருமானம் சேகரிக்கும் நோக்கில் புகையிரத திணைக்களத்தினால் சுமார் 7,000 காணித் துண்டுகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த காணிகளின் முகாமைத்துவமும் நிலுவை வரிகைளைச் சேகரித்தலும் திருப்திகரமாக நடைபெறுவதில்லை. ஆதலால், புகையிரத காணிகளின் எல்லைகளை அளந்து, தௌிவாக நிர்ணயித்து முறையாக வரைபடங்களை தயாரிப்பதற்கும் அவற்றில் குடியிருப்பவர்களை இனங்காணும் பொருட்டு புகையிரத காணிகள் சகலவற்றுக்குமான கணக்கெடுப்பொன்றை மேற்கொள்வதற்கும் புகையிரத காணிகளில் அத்துமீறி குடியிருப்பவர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள புகையிர காணிகளின் முகாமைத்துவத்தை முறைப்படுத்துவதற்கும் இலங்கை புகையிரத திணைக்களத்துக்குரிய அனைத்து காணிகளையும் தழுவும் விதத்தில் சமூக - பொருளாதார ஆய்வொன்றினை மேற்கொள்வதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |