• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு இன்னல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளாகிய ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை
- 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு இன்னல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளாகிய ஊடகவியலாளர்களுக்கு நிவாரணத்தினை வழங்கும் நோக்குடன் அவர்களின் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு, ஊடக அறிவித்தல்களை வௌியிட்டதன் மூலம், அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. அத்தகைய மேன்முறையீடுகள் குறித்து அமைச்சரவைக்கு சிபாரிசுகளை செய்யும் பொருட்டு முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் பின்னர் மேன்முறையீடுகளுக்கான காலப்பகுதி 2017 மே மாதம் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், இதனால் மேலும் 14 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கிணங்க, மேன்முறையீடுகளை ஆராய்ந்து சிபாரிசுகளை செய்யும் பொருட்டு பின்வரும் அமைச்சர்களை உள்ளடக்கும் புதிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கென அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மாண்புமிகு மங்கள சமரவீர அவர்கள்,
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் - (தலைவர்);

* மாண்புமிகு அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்கள்,
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்;

* மாண்புமிகு கயந்த கருணாதிலக அவர்கள்,
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்

.