2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பதுளை - செங்கலடி வீதியை விருத்தி செய்யும் கருத்திட்டத்தின் (86.75 கி.மீ) மேற்பார்வைக்கு மதியுரைச் சேவையினை பெற்றுக் கொள்தல் - பதுளை - செங்கலடி வீதியின் 86.75 கி.மீ நீளங்கொண்ட பிபிலையிருந்து செங்கலடி வரையிலான வீதிப்பிரிவின் புனர் நிருமாணம் மற்றும் அபிவிருத்தி கருதி 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட கடனொன்றை அபிவிருத்திக்கான சவுதி நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. ஆதலால், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைஞர் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, கூறப்பட்ட வீதிப்பிரிவின் மேற்பார்வை மற்றும் நிருமாண மதியுரைச் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை 258.3 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு Resources Development Consultants (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |