• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க துறை கணக்கு நியமங்களுக்கு அமைவாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பொது கணக்கு முறையொன்றை தயாரித்தல்
- தற்போது உள்ளூராட்சி நிறுவனங்களில் நடைமுறையிலுள்ள கணக்கு முறையில் காணப்படும் குறைபாடுகளை சீர் செய்து சருவதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கிடல் தரங்களுக்கு அமைவாக, புதிய கணக்கு முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் உலக வங்கியின் உதவியின் கீழ் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள புதிய கணக்கிடல் முறையொன்று 2018 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் சகல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது சம்பந்தமாக உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த புதிய கணக்கிடல் முறையானது 2018 நிதி ஆண்டிலிருந்து சகல உள்ளூராட்சி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.