• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்ட பிரதேசங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையைத் தாபித்தல்
- இலங்கையில் பெருந்தோட்ட பிரதேசத்தின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியின் மூலம் இந்த வலயங்களில் வசிக்கும் மக்களுக்கு தேசிய அபிவிருத்தி செயற்பாட்டிற்கு பங்களிப்பு நல்கும் விதத்தில் அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வலுவூட்டும் நோக்கில் "பெருந்தோட்ட பிரதேசங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை" தாபிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி இது சம்பந்தமாக காணப்பட்ட உடன்பாடுகள் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினாலும் மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினாலும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இந்த சட்டமூலம் சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.