• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எல்லவெவ நீர்த்தேக்கம் சார்பில் காணி சுவீகரித்தமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய பிரதேச செயலக பிரிவில் நிருமாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள எல்லவெவ நீர்த்தேக்கத்தின் ஊடாக பனாமுற, வளல்கொடை, ஹுலந்தாஓய ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள சுமார் 1,800 ஏக்கர் பிரதேசத்திற்கு நீர்ப்பாசனம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்காக காணி சுவீகரிப்பதன் காரணமாக சுமார் 20 குடும்பங்கள் இடம்பெயர நேரிடுமென இனங்காணப்பட்டுள்ளது. இந்தக் குடும்பங்களுக்கு வீடுகளை நிருமாணித்துக் கொள்வதற்காக மாற்றுக் காணிகளை வழங்குவதற்கும் நியாயமான நட்டஈட்டினை வழங்குவதற்கும் பொருத்தமான வேலைத் திட்டமொன்றினை செய்யும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.