2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கடலில் கூடுகளுக்குள் மீன்வளர்ப்பு தொழிலுக்குரிய சேவைகளை வழங்கும் நிலையமொன்றை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை பெற்றுக் கொள்ளல் - திறந்த கடலில் கூடுகளுக்குள் மீன்வளர்ப்பு தொழினுட்பத்தை பயன்படுத்தி சந்தையில் உயர் கேள்வி நிலவும் Modha, Pompanu, Kossa போன்ற விசேட மீன் இனங்களை வர்த்தக மட்டத்தில் வளர்க்கும் கருத்திட்டமொன்றை சுற்றாடல் பாதுகாப்பு முறையினை பின்பற்றியும் நவீன தொழினுட்பத்தை பயன்படுத்தியும் இரண்டு கட்டணங்களின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியார பிரதேசத்தின் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான உள்நாட்டு கடற்பரப்பில் 150 ஹெக்டயார் கடற்பிரதேசத்தை Global Ceylon Sea Food (Pvt) Ltd., கம்பனிக்கு 30 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் வருடாந்தம் சுமார் 2,000 மெற்றிக்தொன் மீன் உற்பத்தி செய்யப்படவுள்ளதோடு இதற்குத் தேவையான சேவை வழங்குதல், மீன்கள் சந்தைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் செய்யப்பட வேண்டிய பதனிடல் பணிகள் என்பவற்றுக்காக சேவை நிலையமொன்றை நிருமாணிப்ப தற்கான தேவையுள்ளது. இதற்காக மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள் 01 ஏக்கர் காணித் துண்டொன்றை Global Sea Food (Pvt) Ltd., கம்பனிக்கு 30 வருட கால குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |