• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"அபிவிருத்திக்கான நல்லாட்சி" நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்
- சமூகத்தின் ஏதேனும் குழுவொன்றுக்கு அல்லாத பொது மக்களின் தேவையினை நிறைவு செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பாகுமென்பது 'நல்லாட்சி' தொனிப்பொருளின் அடிப்படை அம்சமாகும். நல்லாட்சி சார்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கும் விதத்தில் பொதுமக்களுக்கு அரசாங்க சேவைகளை வழங்குவதனை விருத்தி செய்வதற்காக 31 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களைக் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த நிதியினைப் பயன்படுத்தி "அபிவிருத்திக்கான நல்லாட்சி" என்னும் பெயரில் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்துதல் இந்த அபிவிருத்தியின் நலன்களை சமூகத்தில் விரிவுபடுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் வறுமை மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் வினைத்திறன் மற்றும் பொறுப்புக் கூறல் அரசாங்க சேவைகளை வழங்குவதற்கு ஒத்தாசை நல்குதல், பொருளாதார தீர்மானங்களை எடுக்கும் போதும் அரசாங்க சேவைகளை வழங்கும் போதும் அதன் தரத்தினை மேம்படுத்துவதற்கு இணைந்த ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல் போன்ற விடயங்கள் இதன் கீழ் தழுவப்படும். இதற்கமைவாக, உத்ததேச நிகழ்ச்சித்திட்டத்தை எதிர்வரும் ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கும் இது சம்பந்தமாக அவுஸ்திரேலியா அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவ தற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.