• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க கடன் முகாமைத்துவம்
- அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்து அரசாங்க நிதி வலுப்படுத்தல் செயற்பாட்டினை ஏற்படுத்தி அரசாங்க கடன் அதிகரிப்பினை குறைப்பதன் மூலம் 2020 ஆம் ஆண்டு இறுதியில் அரசாங்க கடன் விகிதாசாரத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரியாக 70 சதவீதம் வரை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் கோரிக்கையின் மீது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரினால் இதற்காக காணக்கிடைக்கும் மாற்று வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, மிகச்சாதகமான அரசாங்க கடன் முகாமைத்துவம் சம்பந்தமாக முதலீட்டு நிறுவனங்களும் கூட பல்வேறுபட்ட பிரேரிப்புகளை முன்வைத்துள்ளன. அத்தகைய சில பிரேரிப்புகள் பின்வருமாறாகும்.

(i) நடுத்தவணைக்கால அரசாங்க நிதி திட்ட ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரியாக அரசாங்க வருமானத்தை படிப்படியாக அதிகரித்தல்.

(ii) செலவு இலாப பகுப்பாய்வின் மூலம் தெரிவு செய்யப்படும் மிகவிரைவில் நன்மை கிடைக்கக்கூடிய நோக்கங்களுக்காக அரசாங்க முதலீடுகளை செய்தல்.

(iii) அரசாங்க முதலீட்டுக்கு உள்நாட்டு தனியார் துறையை அல்லது வௌிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்துக் கொள்வதன் மூலம் அரசாங்க முதலீடுகள் சார்பில் கடன் பெறுதலை குறைத்தல்.

(iv) அரசாங்கத்துக்குச் சொந்தமான பாரிய தொழில் முயற்சிகளின் நிதி மற்றும் கையாள்கை நிலைமைகளை விருத்தி செய்வதன் மூலம் அரசாங்க செலவுகளின்பால் அவற்றின் தாக்கத்தைக் குறைத்தல்.

(v) மிகக் கவனமாக உள்நாட்டு கடன்களை வழங்குதல்.

(vi) ஒப்பீட்டு ரீதியில் மிகக் குறைந்த வட்டியின் கீழ் கடன் பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களில் பெற்றுக் கொள்ளப்படும் கடன்களில் இருந்து கூடிய வட்டியின் கீழ் பெற்றுக் கொண்டுள்ள கடன்களை மீளச் செலுத்துதல்.

குறித்த மாற்று வழிகள், பிரேரிப்புகள் உட்பட பொறுப்பு முகாமைத்துவ செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தும் போது முகம் கொடுக்க நேரிடும் சவால்கள் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, அமைச்சரவையினால் இந்த விடயங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.