• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளிநொச்சி விளையாட்டு கட்டடத்தொகுதியின் நிருமாணப் பணிகளை நிறைவு செய்தல்
- வட மாகாணத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அவர்களுடைய விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் நிருமாணிக்கப்படும் கிளிநொச்சி, விளையாட்டு கட்டடத்தொகுதியின் நிருமாணப் பணிகளாவன தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனை துரிதமாக நிருமாணித்து மக்களுக்கு கையளிக்கும் நோக்கில் இதன் மீதி நிருமாணிப்பு பணிகளை 141.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவின் கீழ் இலங்கை தரைப்படையின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.