• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை மாவட்டம் மில்லனிய பிரதேசத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி வலயமொன்றை தாபித்தல்
- அதிவேக பாதை ஊடாக ஏற்றுமதி வலயங்களை தாபிப்பதற்கு பொருத்தமான காணிகளை இனங்காண்பதற்கும் இதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 2.5 பில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடு குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் மேற்கு, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் செயற்படும் ஏற்றுமதி பதனிடல் வலயங்கள் / கைத்தொழில் வலயங்கள் 12 தற்போது உச்ச ஆற்றலில் செயற்படுகின்றமையினால் புதிய முதலீட்டு வலயங்களைத் தாபிக்கும் தேவை உள்ளது.

வௌிநாட்டு முதலீட்டினை ஈர்ப்பதற்கு இயலுமாகும் வகையில் இலங்கையில் கைத்தொழில் பூங்காவொன்றைத் தாபிப்பதற்கு தாய்லாந்து - யப்பான் கூட்டுத் தொழில்முயற்சி கம்பனியொன்றினால் பிரேரிப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள் ளதோடு, அதற்காக களுத்துறை மாவட்டம் மில்லனிய பிரதேசத்தில் பொருத்த மான காணித் துண்டுகள் சில இனங்காணப்பட்டுள்ளன. இதற்கமைவாக, உத்தேச மில்லனிய ஏற்றுமதி பதனிடல் வலயத்தை தாபிப்பதற்காக இனங்காணப் பட்டுள்ள காணித் துண்டுகளை 2 கட்டங்களின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபைக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.