• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தகவல் தொழினுட்ப மற்றும் மின்னணு துறை தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- தகவல் தொழினுட்ப மற்றும் மின்னணு துறை தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வினை மேம்படுத்தி இரு நாடுகளினதும் உரிய நிறுவனங்களுக்கிடையிலான உறவினையும் ஒத்துழைப்பினையும் தாபிப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிருவாகத்தின் கீழும் மக்களுக்கு சேவைகளை வழங்கும் போதும் தகவல் தொழினுட்ப மற்றும் மின்னணு பாவனை சம்பந்தமாக இந்தியா பெற்றுள்ள அனுபவத்தினை பரிமாறிக் கொள்வதற்கு இதன் மூலம் இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கமைவாக உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையை இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.