• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'தசசில்மாத்தா' கல்வி நிறுவனங்களை விருத்தி செய்தல்
- தற்போது துறவறம் பூண்டுள்ள 'தசசில்மாத்தாக்கள்' அதே போன்று புதிதாக துறவறம் பூணும் 'தசசில்மாத்தாக்கள்' சார்பில் தேவையான துறவற ஒழுக்க பயிற்சியினை வழங்குவதற்கு உயர்மட்ட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்கும் தேவை எழுந்துள்ளது. 'தசசில்மாத்தாக்கள்' சார்பில் தேவையான தர்ம சாஸ்த்திர அறிவு, துறவற மரபுரிமை பயிற்சி மற்றும் ஆரம்ப பிரிவெனாக் கல்வி என்பவற்றை வழங்குவதற்காக ஏற்கனவே 04 'தசசில்மாத்தாக்களுக்கான' கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த நிறுவனங்களை உரிய வகையில் முகாமிப்பதற்கு அனுசரணை வழங்குவது தேவையாகும்.

இதற்கமைவாக, 'தசசில்மாத்தாக்களுக்கான' கல்வி நிறுவனங்கள் சார்பில் முறையான நிறுவன கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கு முறையான பாடநெறியொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் இந்த நிறுவனங்களின் நிருவாக பணிகளை ஒழுங்குபடுத்துவதற்குமாக மதியுரைச்சபையொன்றை நியமிப்ப தற்கும் இவற்றின் பராமரிப்புச் செலவுகளை அரசாங்கத்தினால் ஏற்பதற்குமாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.