• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேரே ஏரி சார்ந்த வலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக கூட்டுறவு மொத்த வியாபார கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணிகளை விடுவித்துக் கொள்ளல்
- பேரே ஏரி நீர் சார்ந்த பிரதேசத்தை பொதுமக்களுக்கு திறந்து விடுவதற்கு செயற்பாட்டுத் திட்டமொன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இதன் கீழ் பேரே ஏரிக்கும் டி.ஆர்.விஜயவர்தன மாவத்தைக்கும் இடையே அமைந்துள்ள காணிகள் அபிவிருத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. கூட்டுறவு மொத்த வியாபார கூட்டுத்தாபனத்தினால் (ச.தொ.ச) தற்போது உரிமை கொண்டுள்ள இந்த காணிகளை பேரே ஏரி சார்ந்த அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக ஹோட்டல் மற்றும் சுற்றுலா வலயத்துக்காக குறித்தொதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அபிவிருத்தி நோக்கங்களுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் இந்த காணிகளை விடுவிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கும் கூட்டுறவு மொத்த வியாபார கூட்டுத்தாபனத்திற்கும் நலன் கிடைக்கக்கூடிய விதத்தில் இந்த காணிகளுக்கான அரசாங்க விலைமதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இணைந்த அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிப்புகளை கோருவதற்கும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.