• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருத்துவம் / நோயியல் ஆய்வு கூடங்கள் மற்றும் சுகாதார நலன் சேவைகளை வழங்குபவர்களுக்கு தேசிய ஏற்றங்கீகார திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கையில் செயற்படும் மருத்துவம் / நோயியல் ஆய்வு கூடங்கள் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிய தரங்களுக்கு அமைவாக உள்ளதென்பதை மதிப்பிட்டு இந்த நிறுவனங்களுக்கு ஏற்றங்கீகாரம் வழங்கும் பணியானது இலங்கை ஏற்றங்கீகார சபையினால் மேற்கொள்ளப்படுகின்றது. இந்தத் துறைக்குரியதாக கிடைக்கப்பெற்றுள்ள ஏற்றங்கீகார கோரிக்கைகளை பரிசீலனை செய்து வைத்தியசாலை மற்றும் சுகாதார நலன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய ஏற்றங்கீகார முறையொன்றை ஆரம்பிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்குரிய நுகர்வு பாதுகாப்பு, நோயாளிகளின் உரிமை மற்றும் கல்வி, மருத்துவ முகாமைத்துவம், தொற்றுக் கட்டுப்பாடு, வசதிகளின் தன்மை, பயிற்சி போன்ற துறைகளைத் தழுவி தேசிய மற்றும் சர்வதேச தரங்களுக்கு அமைவாக தகுதி விதிகளை விருத்தி செய்வது இதன்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைவாக, மருத்துவம் / நோயியல் ஆய்வு கூடங்கள் (அரசாங்க மற்றும் தனியார்), பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றின் தரங்களை மேம்படுத்தும் நோக்கில் தேசிய ஏற்றங்கீகார முறையொன்றை சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.