2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு தலைநகரம் சார்ந்த திண்மக்கழிவு முகாமைத்துவக் கருத் திட்டத்தை தயாரிக்கும் விசேட நிதியத்திற்கான மானிய உடன்படிக்கையில் கைச்சாத்திடல் - கொழும்பு தலைநகரம் சார்ந்த திண்மக்கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தல் சார்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் இதன்கீழ் புத்தளம் அறுவக்காலுவிலுள்ள துப்பரவேற்பாட்டு நில நிரப்பலின் கருத்திட்ட அமுலாக்கம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, உலக வங்கியும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் 115 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியை வழங்குமென்பதுடன் இலங்கை அரசாங்கத்தினால் இந்நோக்கம் கருதி 44 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட செலவினமொன்று உறப்படும். மேலும், இக்கருத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்குத் தேவையான ஆரம்ப செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 700,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை நன்கொடையாக அளிப்பதற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதன் விருப்பத்தை வௌிப்படுத்தியுள்ளது. அதற்கிணங்க, நிதி கொடையினைப் பெற்றுக் கொள்ளும் முகமாக இலங்கை அரசாங்கத்திற்கும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கும் இடையில் மானிய உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |