• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதிபதிகளினதும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைநர் திணைக்களம் ஆகியவற்றின் சட்ட உத்தியோகத்தர்களினதும் சம்பளங்களையும் படிகளையும் திருத்துதல்
- நீதிபதிகளினதும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைநர் திணைக்களம் ஆகியவற்றின் சட்ட உத்தியோகத்தர்களினதும் சம்பளங்களையும் படிகளையும், அவர்கள் நிறைவேற்றும் தொழிற்பாடுகள் மற்றும் அவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள பொறுப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, திருத்துவதற்கான தேவை நீண்ட காலமாக கலந்துரையாடலுக்கு உட்பட்ட விடயமாக அமைந்திருந்தது.

இப்பிரச்சினை தொடர்பில் தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழு உட்பட உரிய அக்கறைதாரர்களுடன் தாபன விடயங்கள் பற்றிய அமைச்சரவை உபகுழுவானது ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதுடன் இவ்விடயம் பற்றி ஆராயும் பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசுகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளினதும், ஏனைய கீழ் நிதிமன்ற நீதிபதிகளினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் சட்டவரைநர் திணைக்களத்தினதும் சட்ட உத்தியோகத்தர்களினதும் சம்பளங்களையும் படிகளையும் 2018 ஆம் ஆண்டிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக திருத்துவதற்கும் அத்தகைய திருத்தங்களை கருத்திற் கொண்டு மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளங்களையும் படிகளையும் திருத்தும் பொருட்டு பிரேரிப்பொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.