2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நெனோ தொழினுட்ப, விஞ்ஞான பூங்காவை விரிவுபடுத்துதல் - தனியார் துறையுடன் இணைந்து நாட்டில் ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்ட சுற்றாடல் ஒன்றை உருவாக்கும் நோக்குடன், இலங்கை நெனோ தொழினுட்ப நிறுவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்நிறுவகத்தின் ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்கள் கருதி ஆறு தனியார் கம்பனிகள் ஒன்றிணைந்துள்ளதுடன், ஏனைய ஒருசில கம்பனிகள் அத்தகைய ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்கள் சார்பில் தமது விருப்பினை வௌிப்படுத்தியுள்ளன. இவ் ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கு ஊடாக இவ் உள்ளூர் உற்பத்திகளுக்காக மேலதிக பெறுமதி சேர்ப்பனவு மூலம் அத்தகைய உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தையில் போட்டி உற்பத்திகளாக உருவாக்குவது சாத்தியமுடைய தாகவிருக்கும். இவ்வாறே விஞ்ஞான, பொறியியல் மற்றும் தொழினுட்ப துறைகளில் நிபுணர்களாக விளங்கும் வௌிநாட்டிலுள்ள இலங்கையர்களின் சேவையானது ஆராய்ச்சிக்குப் பொருத்தமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு மீள கவர்ந்திழுக்கப்படலாம் என்பதுடன் உலகளாவிய கம்பனிகளினால் நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு இது வழியமைக்கும். ஆதலால், ஹோமாகம, பிட்டிபன, மாஹேன்வத்தையிலுள்ள நெனோ தொழினுட்ப, விஞ்ஞான பூங்காவில் வசதிகளை மேலும் விரிவாக்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் செயற்பாடுகளை துரிதமாக நடைமுறைப் படுத்தும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |