• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத திணைக்களத்தின் நிருவாக, சம்பள மற்றும் தொழிற் பிரச்சினைகளைத் தீர்த்தல்
- இலங்கை புகையிரத திணைக்களத்தின் நிருவாக, சம்பளம் மற்றும் பிற தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பது சம்பந்தமாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தாமதமின்றி சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றும் இந்த குழுவுக்கு ஒத்தாசை நல்கும்பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்றும் நியமிப்பதற்கு 2017-12-12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட கூட்டத்தில் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவை உபகுழு உரிய தொழிற்சங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதோடு, இலங்கை புகையிரத திணைக்களத்தின் நிருவாக மற்றும் சம்பள பிரச்சினைகள் சம்பந்தமாக உரிய சகல தரப்பினர்களுடன் இணைந்து கலந்துரையாடி தீர்வினைக் காண்பதற்கும் புகையிரத, சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை திணைக்களம் சார்ந்த சேவைகளாக மீளமைக்கப்பட வேணடுமெனவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இது சம்பந்தமாக எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்குச் சிபாரிசுகளை சமர்ப்பிக்குமாறு இந்த அமைச்சரவை உபகுழுவிடம் கோரிக்கை விடுப்பதற்கும் அதன்போது இந்தக் குழுவுக்கு வசதிகளை செய்யும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரின் தலைமையில் மேலும் மூன்று அமைச்சு செயலாளர்களையும் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநியொருவரையும் தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழுவின் பிரதிநிதியொருவரையும் தனியார் துறையின் ஆளணி முகாமைத்துவ நிபுணர் ஒருவரையும் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.