2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தென் மாகாணத்தின் கனிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வீட்டு வசதிகளை வழங்குதல் - தென் மாகாணத்தின் காலி, மாத்தறை, எல்பிட்டிய, தங்கல்லை ஆகிய பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் கனிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பேதுமான விதத்தில் உத்தியோகபூர்வ வீட்டு வசதிகளை வழங்கும் நோக்கில் காலி, வெக்குனுகொட 'நிலசெவன' வீடமைப்பு கருத்திட்டத்திலிருந்து 192 வீட்டு அலகுகளை இலங்கை பொலிசுக்காக கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான 729.6 மில்லியன் ரூபாவினைக் கொண்ட நிதியினை ஏற்பாடு செய்யும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |