2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை பெற்றுக் கொள்ளல் - முல்லேரியா பிரதேசத்தில் அமைந்துள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் பணிகள் கடந்த காலப்பகுதியில் பாரிய அளவில் விரிவடைந்துள்ளதோடு, இதற்கு ஒருங்கிணைவாக வைத்தியசாலையின் இடவசதிகளை அதிகரிக்கவேண்டியுள்ளது. இந்த வைத்தியசாலை சார்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவொன்றை நிருமாணிப்பது அத்தியாவசியமாவதோடு, இதற்கான புகுவழி வசதிகளுடன் வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள காணித் துண்டினை பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வைத்தியசாலை காணியிலிருந்து 01 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்று 2001 ஆம் ஆண்டில் தனியார் தரப்பொன்றுக்கு 30 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த போதிலும், உரிய குத்தகை நிபந்தனைகளை நிறைவு செய்வதற்கு இந்த நிறுவனம் தவறியுள்ளது. இதற்கமைவாக, உரிய குத்தகை உடன்படிக்கையை இரத்துச் செய்து இந்த காணித் துண்டை கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை நிருமாணிப்பதற்காக விடுவிக்கும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |