• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய பாலங்கள் கருத்திட்டத்தில் சேமிப்பாகவுள்ள நிதி ஏற்பாட்டை பயன்படுத்தி மேலும் 44 பாலங்களை நிருமாணித்தல்
- கிராமிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முகங்கொடுக்கும் போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கில் உருக்குப் பாலங்களை நிருமாணிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிராமிய பாலங்கள் கருத்திட்டத்தின் கருத்திட்ட காலப்பகுதியானது 2018 மார்ச் 08 ஆம் திகதி முடிவடையவுள்ளது. இந்த கருத்திட்டத்தின் இரண்டாம் மூன்றாம் கட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டு சேமிப்பாகவுள்ள எதிர்பாரா செலவினங்களைப் பயன்படுத்தி மேலும் 35 கிராமிய பாலங்களையும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என்னும் அடிப்படையில் 09 தற்காலிக பாலங்களையும் வடிவமைத்து நிருமாணிப்பதற்கும் இதற்கமைவாக கருத்திட்டத்தின் காலப்பகுதியை 2018 ஆஅகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிவரை நீடிப்பதற்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.