• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் இடதுகரை மற்றும் வலதுகரை கால்வாய்களுக்கான நீர் கட்டுப்பாடு மற்றும் அளவீட்டு வசதிகளை வழங்குதல் அடங்கலாக மினிப்பே அணைக்கட்டை உயர்த்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் இடதுகரை மற்றும் வலதுகரை கால்வாய்களுக்கான நீர் கட்டுப்பாடு மற்றும் அளவீட்டு வசதிகளை வழங்குதல் அடங்கலாக மினிப்பே அணைக்கட்டை உயர்த்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 1,576.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு China Gezhouba Groub Company Ltd. நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.