• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள சுரங்க கால்வாய் நிருமாணிப்பு சார்பில் மதியுரைச் சேவையைப் பெற்றுக் கொள்ளல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் மூலம் செயற்படுத்தப்படும் மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் களுகங்கை - மொரகஹகந்த சுரங்க கால்வாய் மற்றும் இஹல எலஹர கால்வாயின் 3 ஆம் 4 ஆம் சுரங்க கால்வாய் நிருமாணிக்கப்படவுள்ளது. இந்த நிருமாணிப்பு பணிகளுக்குரிய ஒப்பந்தங்களின் முகாமைத்துவம், நிருமாணிப்பு மேற்பார்வை மற்றும் செயலாற்றுகை என்பன சார்பில் மதியுரைச் சேவையை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை தற்போது இந்த நிகழச்சித்திட்டத்தின் ஆலோசகர்களான Lhameyer International Gmbh Geo Consult ZT GmbH கூட்டு தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.