2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சட்டக்கல்வி கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்குதல் - இலங்கை சட்டக்கல்வி கல்லூரியின் அதிபரினால் நிறைவேற்றப்பட வேண்டிய அதிகளவிலான கடமைகளிலிருந்து ஒரு பகுதியை கையளிப்பதற்கு கல்லூரியில் இரண்டாம்நிலை நிருவாக அதிகாரியொருவர் இருக்கும் முக்கியத்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சட்டக் கல்லூரிக்கு பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்குவதற்கு சட்டக்கல்லூரி பதவியணியினரை நியமித்தல் சம்பந்தமான ஒழுங்குவிதிகளை திருத்துவதற்கு சட்டக்கல்வி பேரவையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சருடன் உசாவுதலைச் செய்து சட்டக்கல்வி பேரவையினால் தயாரிக்கப்பட்ட இந்த திருத்த ஒழுங்குவிதிகள் 2017-11-28 ஆம் திகதியிடப்பட்டதும் 2047/27 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |