2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை புடவைக் கைத்தொழில், ஆடைகள் நிறுவனத்திற்கு ஆறு மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல் - புடவைக் கைத்தொழிலுக்குத் தேவையான பயிற்சி, பரீட்சை, தொழினுட்பம் மற்றும் முகாமைத்துவ ஆலோசனை சேவைகளை வழங்கும் பொறுப்பானது இலங்கை புடவைக் கைத்தொழில், ஆடைகள் நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு நான்கு மாடிக் கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தாலும் அதன் பிரேரிக்கப்பட்ட மற்றும் எதிர்கால செயற்பாடுகளை விரிவுபடுத்துவதை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பின்னர் ஆறு மாடிகள் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய கட்டத்தை ஆறு மாடிகளாக நிருமாணிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |